tamilskynews.org

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிரித்தானிய அரசியல்வாதிகளின் "நன்றி வணக்கம்" தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகுமா?

E-mail Print PDF

பிரித்தானியாவில் நடக்கும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் பாராளமன்ற அரசியல்வாதிகளினதும் உள்ளூராட்சிச் சபைகளின் அரசியல்வாதிகளின் பங்கு பற்றல்

அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்கள் தமிழில் "வனக்கம்" என்று சொல்லித் தமது உரைகளை ஆரம்பித்து "நன்ரி" என்று சொல்லி முடித்துக் கொள்வார்கள். இப்போது ஒருவர்

சகோதர சகோதரிகலே என்று சொல்லுமளவிற்கு முன்னேறி இருக்கிறார். அவர்களின் உரைகள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். . தமிழர் நிகழ்வுகளில் பிரித்தானிய அரசியல்வாதிகளின் அதிகரித்த பங்குபற்றலுக்கு இந்த ஆண்டில் பிரித்தானியாவில் நடை பெற்ற ஊர்வலங்களில் இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டமையும் வரவிருக்கும் நாடாள மன்றத் தேர்தலும்தான் காரணம். இந்தப் பங்குபற்றல்கள் எல்லாம் பங்களிப்புக்கள் அல்ல. பிரித்தானிய அரசு செயலில் இதுவரை இலங்கைத்தமிழர்கள் பிரச்சனைக்கு என்ன பங்களிப்புச் செய்தது என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடக்கவிடாமல் தடுத்தமையை தமிழர் பிரச்சனைக்கான தீர்விற்கு என்ன பங்களிப்புச் செய்யப் போகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வழங்குவதை தடுப்பீர்களா என்று பிரித்தானியப் பிரதிநிதியிடம் கேட்டபோது அதற்கும் தமிழர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரத்தானியப் பிரதிநிதி பதிலளித்தார். சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கான கடனுதவி வாக்கெடுப்புக்கு வந்தபோது பிரித்தானியப் பிரதிநிதி எதிர்த்து வாக்களிக்க வில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டார். இலங்கைக்கு பிரித்தானியா இரகசியமாக ஆயுத விற்பனையும் செய்தது.

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு படை நடவடிக்கைக்கு பிரான்ஸ் பிரித்தானியாவை அழைத்தபோது இந்தியாவின் எதிர்ப்புக்குப் பயந்து பிரித்தானியா பின்வாங்கியது.

பிரித்தானிய இந்திய அரசியல்வாதிகள்.
வட இந்தியர்கள் வரிந்து கட்டிக்கொண்டு தமிழின ஒழிப்புக்கு சகல உதவிகளையும் செய்யும் போது பிரித்தானியாவில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சர்மாக்களும் சிங்குகளும் பிரித்தானியத் தமிழர்களின் வாக்குகளுக்காக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இவர்களில் சிலர் ஈழப் பிரச்சனையில் உண்மையான கரிசனை கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது.

அரசியல்வாதிகளின் கருத்தும் அரசின் நிலைப்பாடும் ஏன் முரண்படுகின்றது?
மேற்குலக நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் தனது நலன்களைப் பேணுவதற்காக கட்சிகளை ஆட்சியில் அமர்த்தும். ஆட்சியில் அமர்பவர் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் பொது நலனையோ சுயநலனையோ கருத்தில் கொண்டு செயற்படுவார்களானால் அவர்கள் கொல்லப் படலாம். உதாரணம்: ஜோன் F கெனடி. பின்னாளில் இது பாதகமான் விளைவுகளை தமது வர்க்கத்திற்கு ஏற்படுத்தலாம் என்றுணர்ந்த முதலாளித்துவ வர்க்கம் தனது பாணியை முற்றாக மாற்றிக் கொண்டது. இப்போது முதலாளித்துவ வர்க்கம் தனது நலனுக்கு சார்பாக நடக்காத அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறுகளை அம்பலப் படுத்து அவர்களை மிரட்டிப் பணிய வைக்கிறது. உதாரணம்: பில் கிளிண்டன். இப்போது அரசியல்வாதிகள் வாக்குச் சேர்பதற்காக மக்கள் முன்வைக்கும் கருத்துக்களும் ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் நடக்கும் விதமும் வேறு. தேர்தலுக்கு முன் பராக் ஒபாமா தன்னை ஒரு இந்திய நண்பராகக் காட்டிக் கொண்டார். அமரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்குக்களை பெற அவர் இப்படிச் செய்தார். ஆனால் இப்போது அமெரிக்க அரசின் கொள்கை அவரது ஆட்சியில் மாறவில்லை. அமெரிக்காவின் கொள்கையான சீனாவைப் பகைக்காதே என்பதில் அவரால் எந்ததமாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ரீகன் - தட்சர்
அமெரிக்காவில் ரொணால்ட் ரீகனும் பிரித்தானியாவில் மார்கரட் தட்சரும் ஆட்சியில் இருக்கையில் மேற்குலக நாடுகள் ஒரு முக்கிய நிலைப் பாட்டை எடுத்தன. அதாவது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிதிக் கொள்கையையும் வெளியுறவுக் கொள்கையிலும் முடிபுகளை எடுப்பவர்கள் அந்தத் துறைகளின் பணிபுரியும் நிபுணர்களே அன்றி அரசியல்வாதிகள் அல்ல. இது நிலையான கொள்கைக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டது. இவ்விரண்டு கொள்கைகளும் உலக மயமாக்குதலுக்கும் உலகளாவிய ரீதியில் மேற்குலகின் ஆதிக்கத்தைப் பேணுவதற்கும் பெரும் பங்காற்றியது.

பிரித்தானிய அரசியல்வாதிகள் என்னதான் தமிழர்கள் முந்தோன்றி பேசினாலும் அரசின் நடவடிக்கைகள் அவர்களது உலகமயமாக்கல் கொள்கையையும் உலக ஆதிக்கக் கொள்கையையும் பாதுகாப்பதில் இருந்து விலகாது. இலங்கையில் ஒரு உலகமயமாக்கலுக்கு ஆதரவான அரசை ஆதரிப்பதில் அவர்கள் பின்வாங்க மாட்டார்கள். இலங்கை சீன சார்பாகக்ப் போவதைத் தடுக்கத்தான் அவர்கள் முயல்வார்கள். போர்குற்றம் புரிந்த சரத் பொன்சேக்காவை அமெரிக்கா ஆதரிப்பது இதற்க்காகக்த்தான்.

 

Comments
Add New Search
Write comment
Name:
Email:
 
Website:
Title:
UBBCode:
[b] [i] [u] [url] [quote] [code] [img] 
 
 
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss::D:pinch:
:(:shock::X:side::):P:unsure::woohoo::huh::whistle:;):s
:!::?::idea::arrow:
 
Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."

You are here: Home